ஒன்ராறியோவின் வோன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நுழைந்த மர்ம நபர்களின் தாக்குதலில் 46 வயது அப்துல் அலீம் ஃபரூக்கி என்பவர் உயிரிழந்துள்ளார்.
யார்க் பிராந்திய காவல்துறை இந்த தகவலைத் தெரிவித்துள்ளது.
இது ஒரு குறிப்பிட்ட நபரை இலக்கு வைத்த சம்பவம் என காவல்துறை நம்புகிறது.
ஆண்ட்ரீட்டா டிரைவ் மற்றும் பரோன்ஸ் வீதிக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் அதிகாலை 1 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தப்படுவதாக காவல்துறைக்கு அழைப்பு வந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உடலில் காயங்களுடன் ஃபரூக்கியை மீட்டனர்.
அவருக்கு உயிர்காக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குறைந்தது மூன்று சந்தேக நபர்களை காவல்துறை தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
