அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்த வரியில் பெரும்பாலான வரி சட்டவிரோதமானது என்று அந்த நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ள நிலையில் அது இலங்கைக்கு எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தமது தீர்ப்பை அறிவித்தது.
எவ்வாறாயினும் வரி கட்டணங்கள் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
இலங்கைக்கு முன்னதாக விதிக்கப்பட்ட 44 சதவீத வரி பின்னர் 20 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் விதித்த வரி சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு எதிராக அமெரிக்க உயர்நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
