போருக்குப் பின்னர் காசாவிற்கான திட்டங்கள் குறித்து விவாதிக்க, பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் வெள்ளை மாளிகை சந்திப்பில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவில் “போருக்குப் பின்னர்”, என்ற மிக விரிவான திட்டத்தை அமெரிக்கா உருவாக்கி வருவதாக மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காஃப் கூறியுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இருப்பினும், இந்த சந்திப்பு பற்றி வேறு தகவல்கள் வெளியிடப்படவில்லை.
2007 இல் பதவியில் இருந்து விலகிய பிறகு, பிளேர் சில ஆண்டுகள் மத்திய கிழக்கு தூதராக பணியாற்றினார்.
இதேவேளை அமெரிக்காவின் இந்த திட்டம் குறித்து இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சரிடம் வினவியபோது, அதுபற்றித் தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

