இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்த ரயில் கட்டுப்பாட்டாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.
முன்பதாக, முன்பதிவு செய்யப்பட இருக்கை ரயில் சேவைகளில் இருந்து விலகுவதற்கு ரயில் கட்டுப்பாட்டாளர்கள் தீர்மானித்திருந்தனர்.
எனினும், தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளருடன் நடைபெற்ற கலந்துரையாடலையடுத்து முன்னெடுக்கப்படவிருந்த வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
