பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கவிருப்பதாக பிரான்ஸ், பிரிட்டன், கனடாவுக்கு அடுத்தபடியாக அவுஸ்திரேலியாவும் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவுஸ்திரேலிய பிரதமர் கூறியதாவது:
பலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான நடவடிக்கைகளை வரும் செப்டம்பா் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் மேற்கொள்ள அமைச்சரவை நேற்று (11) ஒப்புதல் அளித்துள்ளது. எங்களின் சில நிபந்தனைகளை பலஸ்தீன அரசு நிறைவேற்றுவதைப் பொறுத்து இந்த முடிவு செயற்படுத்தப்படும்.
உலகம் அஞ்சியதைவிட அதிகமாக காஸாவில் நிலைமை மிக மோசமாகிக் கொண்டிருக்கிறது. அங்கு இஸ்ரேல் தொடா்ந்து சா்வதேச சட்டங்களை மீறி, பசியால் தவிக்கும் மக்களுக்கு போதிய உணவு, குடிநீா், அத்தியாவசியப் பொருட்களை மறுத்துவருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
