கல்கரி நகர மேயர் ஜோதி கோண்டெக், “பிரைரி எகனாமிக் கேட்வே” (Prairie Economic Gateway) என்ற பிரம்மாண்டமான உள்நாட்டு துறைமுக திட்டத்திற்கு உதவி கோரி, கனேடிய மத்திய அரசை நாடியுள்ளார்.
இந்த திட்டத்தை நாட்டின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக அறிவிக்க பிரதமர் மார்க் கார்னியை அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த அங்கீகாரம் கிடைத்தால், திட்டத்தின் அனுமதி செயல்முறைகள் எளிதாக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் வேகமாகத் தொடங்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“பிரைரி எகனாமிக் கேட்வே” என்பது, கனடாவின் ஒரு பெரிய உள்நாட்டுத் துறைமுகமாக (Inland Port) செயல்படவுள்ளது.
கடல் வழியாக வரும் பொருட்கள் இங்கு இறக்கப்பட்டு, ரயில் அல்லது டிரக் மூலம் நாட்டின் பிற பகுதிகளுக்கு அனுப்பப்படும்.
இது கனடாவின் பொருள் விநியோகச் சங்கிலி கட்டமைப்பை (supply chains) வலுப்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
