கியூபெக்கில் சட்டவிரோத போதைப்பொருட்களில், புதிதாக ஒரு விலங்கு மயக்க மருந்து கலக்கப்பட்டு வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மெடெட்டோமிடின்(medetomidine) என்றழைக்கப்படும் இந்த மருந்து,
கால்நடை மருத்துவர்களால் விலங்குகளுக்கு மயக்கமூட்டி வலி
நிவாரணியாகப் பயன்படுத்தப்படுகிறது.
மனிதர்களின் நுகர்வுக்கு இது அங்கீகரிக்கப்படவில்லை எனினும்,
சட்டவிரோத சந்தையில் இது பெரும்பாலும் ஃபெண்டானில் (fentanyl)
போன்ற அபின் சார்ந்த மருந்துகளுடன் கலக்கப்படுகிறது.
கனடாவின் பொதுச் சுகாதார நிறுவனம் (INSPQ) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, மெடெட்டோமிடின் சட்டவிரோத போதைப்பொருட்களில் அதிகமாகக் கண்டறியப்படுகிறது.
குறிப்பாக, இது மற்ற மயக்கமூட்டும் போதைப்பொருட்கள் மற்றும்
செயற்கை பென்சோடையசெபைன் (synthetic benzodiazepines) போன்ற போதைப்பொருட்களிலும் கலக்கப்பட்டிருக்கிறது.
இந்த மருந்தை உட்கொள்வதால் ஏற்படும் மிகப்பெரிய ஆபத்து, அதன்
சக்திவாய்ந்த மயக்க விளைவு எனக் கூறப்படுகின்றது.
பொதுமக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும்,
போதைப்பொருட்களைப் பயன்படுத்துபவர்கள் கவனமாக இருக்க
வேண்டும் என்றும் கியூபெக் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
