வவுனியா வடக்கு பிரதேசசபைக்கு உட்பட்ட நெடுங்கேணி கொத்தன்குளம் மாறாஇலுப்பை கிராமத்தில் பிரதேசசபையின் அனுமதி பெறாது கிரவல் அகழ்வு நடைபெறுவதை அறிந்து பிரதேசசபை தலைவர் தி. கிருஸ்ணவேணி நேரடியாக சென்று பார்வையிட்டார்.
இதன்போது பிரதேசசபையின் அனுமதி பெறாது அத்துமீறி கிரவல் அகழ்வு நடைபெற்றதால் அதனை உடன் நிறுத்துமாறு தெரிவித்திருந்ததுடன், பிரதேசசபையின் அனுமதியினை பெற்று பிரதேச சபையின் அறிவுறுத்தலுக்கு அமைய கிரவல் அகழ்வு மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியிருந்தார்.
