மாகோவிலில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பிரயாணித்த சரக்கு ரயில், மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை அண்டிய பகுதியில் இன்று புதன்கிழமை (26) பகல் தண்டவாளத்தை விட்டு விலகிய விபத்தையடுத்து, மட்டு புகையிரதத்தில் இருந்து கொழும்புக்கும், கொழும்பில் இருந்து மட்டு புகையிரத்துக்குமான ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மகாகோவிலில் இருந்து காலை 6.00 மணிக்கு மட்டக்களப்பை நோக்கி பிரயாணித்து சரக்கு ரயில் பகல் 2 மணியளவில் புகையிரத்தில் இருந்து சுமார் 300 மீற்றர் தூரத்தில் தண்டவாளத்தை விட்டு விலகியதையடுத்து ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளது. இதனால் மட்டு புகையிரத நிலையத்துக்கான ரயில் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த தண்டவாளத்தை விட்டு விலகிய ரயில் எஞ்சினை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனை சீர் செய்யும்வரை கொழும்பில் இருந்து மட்டு புகையிரதத்துக்கு வரும் ரயில்கள் ஏறாவூர் புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டும், அதேபோன்று கொழும்பு நோக்கி பிரயாணிக்கும் ரயில்கள் ஏறாவூரில் இருந்து புறப்படுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக மட்டக்களப்பு புகையிரத நிலைய பணிப்பாளர் அ.பேரின்பராஜா தெரிவித்தார்.