அருந்ததி திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை அனுஷ்கா.
வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில் சிறந்தவரான அனுஷ்கா, தற்போது காதி எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இது அனுஷ்காவின் 50 ஆவது திரைப்படமாகும்.
இப் படத்தில் விக்ரம்பிரபு கதாநாயகனாக நடித்துள்ளதோடு வெகு நாட்களாக எதிர்பார்த்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
மேலும் இத் திரைப்படம் ஐந்து மொழிகளில் செப்டெம்பர் 05ஆம் திகதி வெளியாகவுள்ளது.
போதைப்பொருள் கடத்தலை மையமாகக் கொண்டு திரைப்படம் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
