சீதுவ பகுதியில் பொம்மை ஒன்றுக்குள் போதைப்பொருள் மறைத்து கடத்தியதாக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த இவர், தனது குழந்தையைப் பயன்படுத்தி இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.
சீதுவ – ராஜபக்ஸபுர பகுதியில் இன்று காலை பொலிஸார், பொலிஸ் சிறப்புப் படை மற்றும் முப்படையினரால் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின்போதே குறித்த பெண் கைதுசெய்யப்பட்டார்.
அந்தப் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியை சோதனை செய்தபோது, ஒரு அறையில் ஒரு குழந்தையுடன் இருந்த பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு பொம்மையுடன் வெளியே வந்ததினை தொடர்ந்து பொம்மையை பரிசோதித்த பொலிஸார் அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் மற்றும் ஹெராயின் போதைப்பொருள், கேரள கஞ்சா மற்றும் மின்னணு தராசு ஆகியவற்றை கண்டுபிடித்துள்ளனர்.
அந்தப் பெண்ணின் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல ஐஸ் போதைப்பொருள் பொதிகளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த 29 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து நீர்கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் அசோக தர்மசேனவின் மேற்பார்வையில் மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
