Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இளைய சமூகத்திடம் துவிச்சக்கரவண்டிப் பாவனையை ஊக்குவிக்க வேண்டும் – ஆளுநர்

ஜூலை 19, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இன்றைய காலத்தில் தங்கள் தேவைக்கு துவிச்சக்கர வண்டியைப் பயன்படுத்துபவர்களைவிட தேகாரோக்கியத்துக்காக பயன்படுத்துபவர்களே அதிகம்.

இன்றைய இளைய சமூகத்திடம் துவிச்சக்கரவண்டிப் பாவனையை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார்.

பிரபல சைக்கிளோட்ட வீரர் அமரர் அகஸ்ரின் ஞாபகார்த்த மாபெரும் சைக்கிளோட்டப் போட்டி – 2025 இன் பரிசளிப்பு நிகழ்வு, சிரேஷ்ட வெளிநாட்டுச்சேவை உத்தியோகத்தர் அகஸ்ரின் கிறிஸ்ரிரூபன் தலைமையில் கிளிநொச்சி கூட்டுறவு கலாசார மண்டபத்தில் இன்று சனிக்கிழமை காலை (19.07.2025) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநர் தனது உரையில், எனது முதல் நியமனம் நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபராகக் கிடைத்தது. அன்று, குறிகாட்டுவான் வரையில் அளவெட்டியிலிருந்த எனது வீட்டிலிருந்து துவிச்சக்கரவண்டியில்தான் செல்வேன். சில காலங்களில் கடுமையான காற்று வீசும். துவிச்சக்கரவண்டி நகராமல் நிற்கும் அளவுக்கு காற்று வீசும்.

இந்த வலிகளை எதிர்கொண்டமையால்தான் என்னவோ எமக்கு வலிமை கிடைத்தது. எந்தச் சவால்களையும் எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைத்தது. ஆனால் இன்றுள்ள இளம் தலைமுறையினருக்கு இவற்றைப்பற்றி தெரிந்திருப்பதற்கு வாய்ப்புக்கள் மிக அரிது.

இப்போது ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில் பிரதான வீதிகளில் சில இடங்களில் பெற்றோர் குறிப்பாக தாய்மார் கூட்டமாக நிற்பார்கள். பிள்ளைகளை தனியார் கல்வி நிலையங்களில் விட்டுவிட்டு அவர்களுக்காக காத்திருப்பார்கள். பிள்ளைகளை நடந்து செல்வதற்குகூட அனுமதிப்பது குறைவாக உள்ளது.

சைக்கிள் ஓட்டம் என்பதே அருகிவரும் சூழலில் சைக்கிள் ஓட்டப் போட்டிகள் வியப்பாகத்தான் பார்க்கப்படும். தனது தந்தையார் அகஸ்ரின் நினைவாக அவரது மகன் முன்னெடுக்கும் இத்தகைய போட்டிகள் எங்களுக்குத் தேவை. எங்கள் பிள்ளைகள் தங்களை வலிமையாக்கிக் கொள்ள சவால்களை எதிர்கொள்வதை தயார்படுத்திக்கொள்ள இவை அவசியம், என்றார் ஆளுநர்.

இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி, கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், கிளிநொச்சி வடக்கு மற்றும் தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

முந்தைய செய்தி ஓய்வூதியங்களை நிறுத்த நடவடிக்கை
அடுத்த செய்தி யாழில் கையெழுத்து போராட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

மத்திய கிழக்கு பதற்றம் – கனடா விடுத்த அவசர எச்சரிக்கை!

பிப்ரவரி 28, 2026
இலங்கை

தீபச்செல்வனின் 5 வகையான நூல்கள் தடுத்து வைப்பு

ஏப்ரல் 21, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் ஆரம்பமான சர்வதேச புத்தகத் திருவிழா

செப்டம்பர் 5, 2026
இலங்கை

நீர் கட்டணம் குறைக்கப்படுமா….?

பிப்ரவரி 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?