கியூபெக்கின் ஹெமிங்ஃபோர்ட் பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற விபத்து தொடர்பான விசாரணைகள் காவல்துறையினரால் முன்னெடுக்கப்படுகின்றன.
போதையில் வாகனம் ஓட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட சாரதியின் வாகனமும் கியூபெக்கிற்கு புலம்பெயர்ந்தவர்கள் பயணித்த வாகனமும், மோதிக்கொண்டதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் நால்வர் காயமடைந்த நிலையில், வாகனத்திலிருந்த மேலும் பலர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கியூபெக்கின் மொன்றியல் நகரிலிருந்து சுமார் 65 கிலோமீட்டர் தெற்கே அமைந்துள்ள ஹெமிங்ஃபோர்ட் பகுதியில், ஜாக்சன் சாலை சந்திப்பிற்கு அருகிலுள்ள 202 ஆம் இலக்க நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 4:15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் தாக்கத்தால், புலம்பெயர்ந்தோர் பயணித்த வாகனம் கவிழ்ந்துள்ளது.
இதில் நான்கு பேர் காயமடைந்த போதும், அவர்களின் உயிர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
