நாட்டின் சுகாதார அமைப்புக்கு தரமற்ற தடுப்பூசிகளை விநியோகித்தது தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட12 பிரதிவாதிகளுக்கு எதிர்வரும் ஜூலை 11 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேல்நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய குழாம் அழைப்பாணை விடுத்துள்ளது.
