மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் அமைந்துள்ள மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கை களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றம் இன்றையதினம் விசாரணையை ஆரம்பித்தது.
இதன்படி இன்றைய விசாரணையில் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பிலிருந்து குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் ஆஜராகியிருந்தார்.
இந்நிலையில், நீதவான் குருக்கள்மடம் மனிதப் புதைகுழி தொடர்பில் உள்ள அனைத்து சார்ந்த தரப்பினரும் எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என பணிப்புரை வழங்கினார்.
இந்நிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
