மட்டக்களப்பு, ஆரையம்பதி – திருநீற்றுக்கேணி பகுதியில் இன்று பிற்பகல் பாம்பு கடித்ததில் 38 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காட்டு வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது அவரை பாம்பு கடித்ததாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர். பாம்புகள் இப்பகுதியில் அதிகம் காணப்படுகின்றன எனவும் கிராமவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் ஆரையம்பதி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
