2050 ஆம் ஆண்டுக்குள் நிகர-பூஜ்ஜிய (Net-zero) பசுமைக்குடில் வாயு வெளியேற்ற இலக்கை எட்டுவது தற்போது சாத்தியமில்லை என்று ‘பாத்வேஸ் அலையன்ஸ்’ (Pathways Alliance) தெரிவித்துள்ளது.
கனடாவின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் மணல் அகழ்தல் நிறுவனங்களின் கூட்டமைப்பான ‘பாத்வேஸ் அலையன்ஸ்’ (Pathways Alliance), கனடாவில் அண்மையில் அமலுக்கு வந்த புதிய சட்டத்தை இதற்கு காரணமாக சுட்டிக்காட்டுகின்றது.
Bill C-59 என்று அழைக்கப்படும் அந்த சட்டமானது, சுற்றுச்சூழல் வாக்குறுதிகளை பகிரங்கமாக விவாதிக்கும் தங்கள் திறனை பாதிப்பதே இதற்குக் காரணம் என, அக்கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
நிறுவனங்கள் தங்கள் சுற்றுச்சூழல் தொடர்பான கூற்றுக்களை நிரூபிக்க வேண்டும் என்று, இச்சட்டம், கட்டாயப்படுத்துகிறது.
இந்த சட்டத்தின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, பாத்வேஸ் அலையன்ஸ் தங்கள் வலைத்தளம், சமூக ஊடகங்கள் மற்றும் பிற பொதுத் தகவல்தொடர்புகளில் இருந்த அனைத்து உள்ளடக்கங்களையும் கடந்த ஜூன் மாதத்தில் நீக்கியிருந்தது.
கனடாவின் புதிய சட்டம், சுற்றுச்சூழல் குறித்த கூற்றுக்களை நிரூபிப்பதில் உள்ள சவால்களை எடுத்துக்காட்டுவதாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.
