செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து விமர்சிப்பவர்களை, நடக்காத சூழல்களைக் கொண்டுவரும் எதிர்மறையான சக்திகள் (very negative forces) என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சாடியுள்ளார். மேலும், AI துறையில் அமெரிக்கா தொடர்ந்து முன்னணி வகிப்பதை உறுதிசெய்ய விரும்புவதாகவும் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அயர்லாந்தில் உள்ள தனது கோல்ஃப் மைதானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், AI-இல் அமெரிக்கா சீனாவை விட முன்னணியில் உள்ளதாகவும், அதில் வெற்றி பெறுகிறவர்களே ஒட்டுமொத்த வெற்றி பெறுபவர்கள் என்றும் குறிப்பிட்டார். பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை விதிக்க முடியும் என்றாலும், பேசக்கூடக் கூடாத விஷயங்களைப் பேசும் பல எதிர்மறையான சக்திகள் (very negative forces) நடக்காத விஷயங்களை எழுப்பி வருவதாக அவர் கூறினார்.
வேகமாக வளர்ந்து வரும் AI தொழில்நுட்பம் மனிதகுலத்தின் அழிவிற்கே வழிவகுக்கும் என்று Anthropic நிறுவன ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவில் AI பற்றிய பொது விவாதம் சூடுபிடித்துள்ளது. மேலும் பென்டகன் இந்த ஆண்டு Anthropic மாதிரியால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எச்சரித்திருந்ததுடன், AI பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் சிலர் ராஜினாமா செய்து சர்வதேச ஒருங்கிணைப்பு தேவை என வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, Anthropic CEO டாரியோ அமோடி AI வளர்ச்சியைக் கட்டுப்படுத்த மூன்று படிகள் கொண்ட கட்டமைப்பை முன்வைத்தார். இதற்கு ஈலான் மாஸ்க் மற்றும் OpenAI CEO சாம் ஆல்ட்மேன் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். இருப்பினும், அமெரிக்க மற்றும் சீன நிறுவனங்களுக்கு இடையிலான போட்டியே இதில் மிகப்பெரிய சங்கடம் என அமோடி நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
டிரம்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் அவரது நிர்வாகம் AI நிறுவனங்களை பெருமளவில் ஆதரித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் 3 இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக AI நிர்வாகிகள் பிரச்சாரங்களில் பெரும் தொகையை முதலீடு செய்து வருகின்றனர். குறிப்பாக, ஈலான் மாஸ்கின் ‘அமெரிக்கா PAC’ குடியரசுக் கட்சி வேட்பாளர்களை ஆதரிக்க ஏற்கனவே கோடிக்கணக்கில் செலவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

