Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

காணிகளை விடுவிக்க கோரி முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்

செப்டம்பர் 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இராணுவம் மற்றும் கடற்படை ஆகியோரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை விடுவிக்கக் கோரி எதிர்வரும் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நகரில் பருத்தித்துறை நகரசபையால் நடாத்தப்படவுள்ள கவனயீர்ப்புப் பேரணிக்கு நகர சபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி ஆதரவு தெரிவித்து இன்றையதினம் தனது அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை நடாத்தியுள்ளார்.

அவர் அதில் குறிப்பிட்டதாவது,

பருத்தித்துறை நகரின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களான தபால் திணைக்களம், நீதிமன்றம், நகர சபை ஆகியவற்றிற்குச் சொந்தமான காணிகளை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தினரையும், சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான கடற்படை வெளிச்ச வீடு கடற்படை முகாமிலிருந்ததும் உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்தி கண்டனப் பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகர சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி, எதிர்வரும் 11.09.2026 வெள்ளிக்கிழமை காலை 8:00 மணியளவில் பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் இருந்து ஆரம்பமாகி, பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை சென்று நிறைவடையும்.

அங்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு வழங்குவதற்காகப் பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்படவுள்ளது.
இந்த எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பருத்தித்துறை நகர சபையில் பிரதிநிதித்துவப்படுத்தும் npp தவிர்ந்த அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

எனவே, எமது நகரின் பூர்வீக நிலங்களை மீட்டெடுக்கும் இந்த பேரணியில் பருத்தித்துறை மக்கள் அனைவரும் பெருந்திரளாக அணிதிரண்டு தங்களுடைய முழுமையான ஆதரவை வழங்குமாறு பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெயகோபி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முந்தைய செய்தி வவுனியா மாநகர முதல்வர் விவகாரம்: இடைக்காலத் தடை நீடிப்பு!
அடுத்த செய்தி கோஸ்லாந்தையில் விபத்து – பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் – ஒகா பூங்கா ஏரியில் காணாமல்போன இளைஞரைத் தேடும் பணிகள் தீவிரம்

ஜூலை 20, 2026
1
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

வரணி தான்தோன்றி கண்ணகை அம்மன் ஆலய மகா கும்பாபிசேகம்…

ஏப்ரல் 5, 2025
இலங்கை

அச்சத்தில் ராஜபக்ஷக்கள் -இராமலிங்கம் சந்திரசேகர் கருத்து!

ஆகஸ்ட் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சிறிமா எதிரிசூரியவின் மரண தண்டனை ரத்து!

ஜூலை 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?