பொரலஸ்கமுவ மாலினி புளத்சிங்ஹல மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி பாதாள உலக குழுவோடு தொடர்புடைய நபரான தெகிவளை சண்டோ, கொஸ்மல்லி என்பவரின் காசாளரை இலக்கு வைத்த இந்த தாக்குதலை மேற் கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த துப்பாக்கிசூட்டை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மேற் கொண்டதுடன், காசாளருக்கு பதிலாக அவரின் தந்தையான சுனில் பெர்னாடோ இதில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



