தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுக்காரண் குடியிருப்பு பகுதியில் காணப்பட்ட பனந்தோப்பில் இன்று வெள்ளிக்கிழமை (4) மாலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டது. உடனடியாக பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து குறித்த தீயை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர். எனினும் தீ பரவ ஆரம்பித்துள்ளமையினால் தொடர்ந்து பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அருகில் மக்களின் குடியிருப்புகள் காணப்படுகின்றமையினால் மக்களின் குடியிருப்புகளுக்கு தீ பரவாத வகையில் கட்டுப்படுத்த தலைமன்னார் பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


