Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

தமிழகக் கோவில்களில் செல்போன் தடை: கர்ப்பிணிகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு விலக்கு!

செப்டம்பர் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க 52 முதுநிலை திருக்கோவில்களில் பக்தர்களின் அமைதியான தரிசனத்தையும், ஆன்மிகச் சூழலையும் பாதுகாக்கும் வகையில் செல்போன் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாகப் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் முக்கியத் தளர்வுகளையும் புதிய விளக்கங்களையும் அளித்துள்ளார்.

அதன்படி, கோவில்களுக்கு வருகை தரும் கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இந்தத் தடையிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படுகிறது.

அவர்களிடமிருந்து செல்போன்களைப் பெற்றுப் பாதுகாப்புக் வைப்பகங்களில் வைக்க வேண்டிய அவசியமில்லை என்றும், விசேஷ மற்றும் திருவிழா நாட்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த ஏதுவாகப் பொதுமக்கள் அனைவரிடமும் செல்போன்களைப் கட்டாயமாகப் பெற்று வைப்பதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், கேமரா வசதி இல்லாத சாதாரண ரக மொபைல் போன்களைப் பயன்படுத்துவோருக்கும் எந்தவிதமான தடையுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள செல்போன் வைப்பகங்களில் வசூலிக்கப்படும் ரூ. 5 கட்டணமானது அரசாங்கத்திற்கு வருவாய் ஈட்டுவதற்காக அல்ல என்றும், அங்குப் பணியாற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கான ஊதியம் மற்றும் டோக்கன் அச்சுச் செலவினங்களுக்காகவே பயன்படுத்தப்படுகிறது என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதில் ஏதேனும் கூடுதல் தொகை மிஞ்சினால், அது ஏழைப் பக்தர்களின் அன்னதானத் திட்டத்திற்கே பயன்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், வரலாற்றுத் சிறப்புமிக்க சிற்பங்கள் மற்றும் தமிழ் கல்வெட்டுகளின் அமைதியை பக்தர்கள் ரசித்துத் தரிசனம் செய்யவே நீதிமன்ற உத்தரவின்படி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

முந்தைய செய்தி குரூப் கேப்டன் அபினந்தன் வர்த்தமான் வர்த்தக பயணிகள் விமானியாக புதிய பயணம்
அடுத்த செய்தி சித்தா இயக்குநருடன் கைகோர்க்கும் கமல்ஹாசன்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் மாபெரும் வெற்றி: முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஆகஸ்ட் 3, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

Get Out’ கையெழுத்து இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் த.வெ.க தலைவர் விஜய்

பிப்ரவரி 26, 2025
இந்தியா

தமிழகத்தில் H1N1 பன்றிக்காய்ச்சல் : சுகாதாரத்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை

ஆகஸ்ட் 26, 2026
இந்தியா

தேர்தல் வெளிப்படைத்தன்மையில் சர்வதேச அளவில் முதலிடத்தில் இந்தியா!

ஜூன் 29, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?