மொன்றியலின் அவுன்ட்சிக்-கார்த்தியேவில் பகுதியில் (Ahuntsic-Cartierville) உள்ள குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் மொன்றியல் பொலிஸார் (SPVM) தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும், எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவுன்ட்சிக்-கார்த்தியேவில் உள்ள பூர்போன் வீதிக்கும் (Bourbonnière Street) அமிட்ஸ் தெருவிற்கும் (Fleury Street East அருகில்) இடைப்பட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக பொதுமக்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.
தகவல் கிடைத்த உடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் ரோந்துப் படையினர், அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட சோதனையின் போது, குறைந்தது ஒரு துப்பாக்கிச் தோட்டா உறை (shell casing)
கண்டெடுக்கப்பட்டதாக மொன்றியல் பொலிஸ் ஊடகப் தொடர்பாளர் தெரிவித்தார்.
மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான சான்றுகள் அப்பகுதியில் கண்டறியப்பட்ட போதிலும், கட்டிடங்களுக்கோ அல்லது வாகனங்களுக்கோ சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தடயவியல் நிபுணர்கள் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்தை முற்றுகையிட்டு சோதனைகளை முன்னெடுத்தனர். சந்தேகநபர்களை அடையாளம் காணும் நோக்கில், அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) பதிவுகளை ஆய்வு செய்து வருவதுடன், அப்பகுதி மக்களிடமும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



