இலங்கை அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசியலமைப்பின் 22வது திருத்தத்துக்கு எதிரான மனு மீதான விசாரணையை நாளை வரை ஒத்திவைக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இன்றைய தினம் 10.30 மணியளவில் மனுதாரர் தரப்பின் வாதங்கள் நிறைவடைந்தன.
இந்தநிலையில் மனுதாரர் தரப்பு, இடைக்கால மனுதாரர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரின் மேலதிக வாதங்கள் நாளை இடம்பெறவுள்ளன.



