அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் ஆர்ப்பாட்ட பேரணியின் காரணமாக கொழும்பு கோட்டை உட்பட பல வீதிகளில் இன்றைய தினம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் கொழும்பு கோட்டையிலிருந்து லோட்டஸ் வீதி வழியாக ஜனாதிபதி செயலகம் நோக்கி பயணித்தனர்.
இதனால் வீதியைத் தடுக்க பொலிஸார் வீதித் தடைகளை அமைத்துள்ளனர்.
அதனால், அதனைச் சுற்றியுள்ள வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
