Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

இலங்கையில் காணாமல் போனவர்கள் பற்றிய பிரச்சினைக்குத் தீர்வு காண தொடர்ச்சியான கூட்டு முயற்சிகள் அவசியம் – ICRC

ஆகஸ்ட் 31, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

செஞ்சிலுவை சர்வதேசக் குழுவானது (ஐ.சி.ஆர்.சி.), ஆயுத மோதல், வன்முறை, அனர்த்தங்கள், புலம்பெயர்வு ஆகியவற்றின் காரணமாக, காணாமல் போன அல்லது தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்ட உலகெங்கிலுமுள்ள ஆயிரக்கணக்கானவர்களை ஆகஸ்ட் 30ஆம் திகதி கௌரவப்படுத்தியதுடன், தமது அன்புக்குரியவர்களுக்கு நேர்ந்த கதியை அறியாது வலியில் வாடும் குடும்பங்களுடன் தனது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியது.

இலங்கையில், சகல சமூகங்களையும் சேர்ந்த காணாமல் போனவர்களின் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்னமும் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது மற்றும் அவர்கள் எங்குள்ளார்கள் என்பதற்கான விடை தெரியாமல் காத்திருக்கின்றன. தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமை காணாமல் போனவர்களின் குடும்பத்தவர்களுக்குண்டு. துயரப்படவோ, முடிவொன்றைக் காணவோ, தமது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பவோ முடியாத நிலையில், காணாமல் போன தமது அன்புக்குரியவர்களின் பிரசன்னமின்மையாலும் அதனோடு வரக்கூடிய நிச்சயமற்ற தன்மையாலும் எழக்கூடிய மனவெழுச்சிசார், பொருளாதார, சட்ட, நிர்வாக, மற்றும் சமூக ரீதியான சவால்களை எதிர்கொள்ளவதில் இக்குடும்பங்கள் அடிக்கடி சிரமங்களை எதிர்கொள்கின்றன.

காணாமல் போனவர்களின் குடும்பத்தவர்களது தேவைகளை நிறைவேற்றுதல் என்பது சிக்கலானதும் பன்முகங்களைக் கொண்டதுமான நடைமுறையாகும். இந்தக் குடும்பத்தவர்கள் இச்செயன்முறையின் நடுநாயகமாகவும் பிரதான பங்குதாரர்களாகவும் உரித்துடையவர்களாகவும் காணப்படுகிறார்கள். இவர்களது தேவைகளுக்குப் பதிலிறுக்கும் முதன்மைப் பொறுப்பு தேசிய அதிகாரத் தரப்பினரைச் சார்ந்திருக்கும் அதேவேளை, இந்தக் குடும்பங்களின் பன்முகத் தேவைகளுக்குப் பதிலிறுப்பதற்கு உதவக் கூடிய பரிபூரண சட்டகமொன்றைக் கட்டமைப்பதனூடாக பரந்தளவிலான, நிலைத்து நிற்கக்கூடிய பதிலிறுப்பு நடவடிக்கைகளில் உள்ளுர் பங்குடைமையாளர்கள் பங்களிப்பு வழங்க முடியும். இதன் மையப்புள்ளியாக அமைவது யாதெனில், பல்தரப்பட்ட பங்குடைமையாளர்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை உள்ளடக்கி, காணாமல் போனவருக்கு நேர்ந்த கதியையும் அவர் எங்கிருக்கிறார் என்பதையும் தெளிவுபடுத்துவதனை நோக்கிய முக்கிய படிமுறையான ‘தேடுதல்’ ஆகும்.

இலங்கையில் தற்பொழுது செஞ்சிலுவை சர்வதேசக் குழு ‘காணாமல் போனவர்கள் தொடர்பான நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை அமுல்படுத்தி வருகிறது. காணாமல் போனவர்களுக்கு நேர்ந்த கதியையும் அவர்கள் எங்கிருக்கிறார் என்பதையும் தெளிவுபடுத்துவதற்காக காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளித்தல், தேசிய மற்றும் உள்ளுர் மட்டங்களிலுள்ள திறன்களை பலப்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைந்ததும் அரசால் வழிநடத்தப்படுகின்றதும் சமுதாயத்தை அடிப்படையாகக் கொண்டதுமான முயற்சிகளை முன்னெடுத்தல் என்பவற்றின்மூலம் காணாமல் போனவர்கள் தொடர்பான விவகாரத்தில் நிலைத்தகு பதிலிறுப்பை மேம்படுத்துவதே இந்நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும்.

காணாமல் போனவர்கள் விவகாரத்துக்குப் பதிலிறுப்பது, சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் இன்றியமையாததாகும். தீர்வு காணப்படாமல் நிலுவையிலுள்ள முறைப்பாடுகள், மோதல் முடிவடைந்து நீண்ட காலத்துக்குப் பின்னரும் மன உளைச்சலைத் தொடரச் செய்து, மனத்தாங்கல்களை ஆழப்படுத்தி, சமூகங்கள் தமது வடுக்களிலிருந்து மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்புதலைப் பாதிக்கும். ஆயுத மோதலொன்று முடிவடைந்து பல தசாப்தங்கள் கடந்திருந்தாலும்கூட, இப்பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வை ஏற்படுத்துவதற்கு நிலைத்தகு அரசியல் உறுதிப்பாடு அவசியமாகும்.

முந்தைய செய்தி கொழும்பு துறைமுகத்தில் பெருமளவு போதைப்பொருள் மீட்பு!
அடுத்த செய்தி குருந்தூர் மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு பாதுகாப்பு கோரிய தேரர்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினார் நா.உ துரைராசா ரவிகரன்

நவம்பர் 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட முதலை

மார்ச் 12, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வழக்கு தொடர்பாக விசாரணை முன்னெடுப்பு!

ஆகஸ்ட் 28, 2025
இலங்கை

மட்டு ஒந்தாட்சிமடம் கடற்கரையில் கரையொதுங்கிய இந்திய ரொக்கட்டின் பாகங்கள்

ஜனவரி 4, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?