Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

போதைப்பொருள் இல்லா இந்தியா: பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்களுக்கு அழைப்பு

ஆகஸ்ட் 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரதமர் நரேந்திர மோடி தனது 137-வது ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) வானொலி நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அதன் போது, இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்ற அனைத்து தரப்பு மக்களும், முக்கியமாக இளைஞர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

போதைப்பொருள் பயன்பாட்டு அச்சுறுத்தலில் இருந்து நாட்டின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களைப் பாதுகாக்கவும், வலுவான மற்றும் ஆரோக்கியமான பாரதத்தை உருவாக்கவும் ‘வளர்ந்த இந்தியாவுக்கான போதைப்பொருள் இல்லா இளைஞர்கள்’ என்ற இயக்கம் நாடு முழுவதும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், தெருவோர வியாபாரிகளுக்கான ‘பிரதமரின் சுவநிதி திட்டம்’ பெண்களின் பொருளாதார சுயாட்சிக்கு பெரும் உறுதுணையாக இருந்து வருவதாகப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் மொத்த பயனாளிகளில் 46 சதவீதம் பேர் பெண்கள் என்றும், சுமார் 35 லட்சம் சகோதரிகள் மற்றும் தாய்மார்கள் இதன் மூலம் தங்கள் சுயதொழில்களைத் தொடங்கி மேம்படுத்தி புதிய வலிமையைப் பெற்றுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதனுடன், வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் பொருட்களையே மக்கள் வாங்க வேண்டும் என்றும், நமது நாட்டின் பாரம்பரியம் மற்றும் கைவினைப் பொருட்கள் குறித்து பெருமிதம் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

மேலும், வரலாற்றுத் தகவல்களை எளிதில் பெற உருவாக்கப்பட்ட இணையதளத்தில் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் மற்றும் சேர ராஜ்ஜியம் குறித்த முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதை நினைவுகூர்ந்த அவர், தூய்மை இந்தியா திட்டம் இளைஞர்களின் பங்களிப்பால் அமர்நாத் யாத்திரை வரை வெற்றிகரமாகப் பரவியுள்ளதையும் பாராட்டினார்.

முந்தைய செய்தி நேபாள வெள்ளப் பேரழிவு: உடல்களை அவசரமாக அடக்கம் செய்ய நடவடிக்கை
அடுத்த செய்தி திண்டுக்கல்லில் குழந்தைகள் மீது பால்வேன் மோதி விபத்து

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவிசேட செய்திகள்

பாகிஸ்தானின் 3 இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல் – மூவர் பலி

மே 6, 2025
இந்தியா

உசிலம்பட்டி சிறுமி தற்கொலை விவகாரத்தில் தலைமையாசிரியை கைது

ஆகஸ்ட் 30, 2026
இந்தியா

நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்

மே 26, 2026
இந்தியா

கோயில் கூட்ட நெரிசலில் 9 பேர் பலி.மோடியின் உடனடி நடவடிக்கை!

நவம்பர் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?