Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

மியன்மார் பௌத்த மடாலயம் மீது ராணுவ வான்வழித் தாக்குதல் – பொதுமக்கள் பலி!

ஆகஸ்ட் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மியன்மாரில் பௌத்தர்களின் புனித காலத்தைக் குறிக்கும் வகையில் விகாரையில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு வார கால தியானப் பயிற்சியில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அமைதியான முறையில் பங்கேற்றிருந்த வேளையில், அந்நாட்டு ராணுவம் நடத்திய கொடூரமான வான்வழித் தாக்குதலில் 3 பெண்கள் உட்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய மியான்மரின் மியாவ்ங் பகுதியில் உள்ள ஸ்வெல் லே ஓ கிராமத்தில் இயங்கி வரும் பௌத்த மடாலயத்தைக் குறிவைத்து, ராணுவப் போர் விமானம் ஒன்று சுமார் 15 நிமிட இடைவெளியில் இரு சக்திவாய்ந்த குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் இரண்டாவது குண்டு அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கிளர்ச்சியாளர்களைக் குறிவைப்பதாகக் கூறிக்கொண்டு, பொதுமக்கள் கூடும் மத வழிபாட்டுத் தலங்களை ராணுவம் வேண்டுமென்றே திட்டமிட்டுத் தாக்கி வருவதாக ஜனநாயக ஆதரவு அமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைப் பிரிவு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

கடந்த 2021-ஆம் ஆண்டு ஆங் சான் சூச்சியின் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்துவிட்டு ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது முதல், மியான்மரில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது.

வான்வழித் தாக்குதல்கள், திருமண நிகழ்வுகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை இலக்கு வைக்கும் பயங்கரவாத உத்திகளை ராணுவம் கையாண்டு வருவதால், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 1,00,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

முந்தைய செய்தி வசாவிளான் மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
அடுத்த செய்தி ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 37 பேர் காயம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

எங்கள் இலக்கை அடையும் வரை நிறுத்தமாட்டோம் – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

செப்டம்பர் 30, 2024
உலகம்

ஈரான் வான்வெளி மீள்திறப்பு -மீண்டும் சர்வதேச விமான போக்குவரத்து ஆரம்பம்!

ஆகஸ்ட் 3, 2025
உலகம்

போதைப்பொருள் கடத்தல் – சிங்கப்பூரில் தமிழர் ஒருவருக்கு மரண தண்டனை விதிப்பு!

செப்டம்பர் 26, 2025
உலகம்

இத்தாலி அருங்காட்சியகத்தில் 80 மில்லியன் யூரோ மதிப்புள்ள ஓவியங்கள் கொள்ளை

ஆகஸ்ட் 17, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?