மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களமும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய பிரதேச தொழிற்சந்தை நேற்றைய தினம் (20) ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது
ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மனிதவலு அபிவிருத்தி உத்தியோகத்தர் கனகசுந்தரசுவாமி ஜெனமேஜயந் அவர்களின் ஒழுங்குபடுத்தலுடன் நடைபெற்ற குறித்த நிகழ்வானது ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி பிரம்மியா தினேஸ்குமார் தலமையில் ஆரம்பமாகி நடைபெற்றிருந்தது.
குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கக்கூடிய அரச, அரச சார்பற்ற தொழில் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தொழிற் பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன் குறித்த தொழிற் சந்தையில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தொழில் தேடுனர்கள் மற்றும் தொழிற்பயிற்சிகளில் ஆர்வமுள்ள இளைஞர் யுவதிகள் என பெருமளவானோர் கலந்து கொண்டு பயன்பெற்றிருந்தனர்.
இந் நிகழ்வில், மாவட்ட மனிதவலு அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.சுரேஸ்குமார் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் திருமதி ஜெயந்தி செல்வரத்தினம், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருக்குமார், பிரதேச செயலக உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

