கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரந்தனாறு பகுதியில் வீதியை மறித்து இன்று (19) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
பிரமந்தனாறு பகுதிக்குச் செல்லும் பிரதான வீதியானது விஸ்வமடு சந்தியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் அளவில் புனரமைப்பு செய்யப்பட்டு காபெட் வீதியாக காணப்பட்டிருந்த போதிலும் எஞ்சிய மூன்று கிலோமீட்டர் வீதி புனரமைப்பு செய்யப்படாது 16 வருடங்களுக்கு மேல் குன்றும் குழியுமாக காணப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
வீதி சேதமடைந்து காணப்படுவதன் காரணமாக பிரமந்தனாறு, மயில்வாகனபுரம், கல்லாறு போன்ற பகுதிகளைச் சேர்ந்த மூன்று கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரமந்தனாறு மகா வித்தியாலயம் மற்றும் பிரமந்தனாறு ஆரம்ப சுகாதார வைத்தியசாலை உள்ளிட்ட சேவைகளை பெற முடியாதுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அப்பகுதியிலிருந்து பாடசாலைக்கு கற்றல் செயற்பாடுகளுக்காக மாணவர்கள் உரிய நேரத்தில் பாடசாலைக்கு சமூகமளிக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளதாகவும், வெளி மாவட்டங்களில் இருந்து கற்றல் செயற்பாட்டை முன்னெடுக்க வரும் ஆசிரியர்கள் குறித்த வீதியின் ஊடாக பயணிப்பதன் காரணமாக குறித்த நேரத்தில் பாடசாலைக்கு சமூகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
மழை காலங்களில் வெள்ளம் தாரணமாக பாடசாலைக்கு செல்ல முடியாத நிலையில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், விவசாய உற்பங்களை சந்தைப்படுத்துவதிலும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் குறிப்பிடுகின்றர்.

