மொன்றியல் நகரில் உள்ள ஏல விற்பனை நிலையம் ஒன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, சுமார் 2,000 ஆண்டுகள் பழைமையான ’பெரு நாட்டு’ கிண்ணம் ஒன்று கண்டறியப்பட்டு, மீண்டும் அந்த நாட்டுக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பண்டைய ‘நாஸ்கா’ (Nasca) கலாசாரத்தைச் சேர்ந்த இந்த பழங்கால கிண்ணம், கனேடிய பொலிஸ் துறையின் (RCMP) தலையீட்டினால் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அந்த கிண்ணம் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்டிருக்கலாம் எனக்கருதி, கனடாவில் உள்ள பெரு நாட்டு தூதரகம், கனடிய வெளியுறவுத் துறை மூலம் அதனைத் திருப்பித் தருமாறு கோரிக்கை விடுத்தது.
யுனெஸ்கோவின் 1970-ஆம் ஆண்டு கலாச்சாரச் சொத்துக்கள் கடத்தலைத் தடுக்கும் உடன்படிக்கையின் கீழ், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த பழைமையான கிண்ணத்தை விற்பனைக்கு வைத்திருந்த மொன்றியலைச் சேர்ந்த நபர், இதனைத் தனது முன்னோர்களிடமிருந்து வாரிசுரிமையாகப் பெற்றிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

