Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு

ஆகஸ்ட் 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

2026-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டில் காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 15 அதிகாரிகள் மற்றும் சார்நிலை அலுவலர்களுக்கு முதலமைச்சரின் சிறப்புப் பதக்கங்கள் வழங்கப்படுவதாகத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வுப் பணியில் மிகச் சிறந்த முறையில் செயல்பட்டமைக்காக 10 அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்குத் தன்னலமற்ற சேவை வழங்கியதற்காக 5 அதிகாரிகளுக்கும் இந்த கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது.

காவல் புலனாய்வுக்கான சிறப்புப் பணிப் பதக்கப் பிரிவில், கும்மிடிபூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் சி.ஜெயஸ்ரீ, திருவள்ளூர் காவல் துணை கண்காணிப்பாளர் நா.தமிழரசி, கோவை சைபர் கிரைம் ஆய்வாளர் கொ.அழகுராஜ், திருச்சி குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை துணை கண்காணிப்பாளர் ந.தனுசியா, கோவை தனி சிறுவர் உதவிப் பிரிவு ஆய்வாளர் சே.லதா, சென்னை டி.ஜி.பி அலுவலக நிர்வாக உதவித் தலைவர் வி.கோமதி, பெரம்பலூர் கைகளத்தூர் ஆய்வாளர் மா.சித்ரா, விழுப்புரம் மேல்மலையனூர் ஆய்வாளர் ரா.வினதா, சிவகங்கை குற்றப் பதிவேட்டுக்கூட ஆய்வாளர் கோ.மகாலெட்சுமி மற்றும் திருநெல்வேலி மேற்கு சரக காவல் துணை ஆணையர் ச.விஜயகுமார் ஆகிய 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, சிறந்த பொதுச் சேவைக்கான முதலமைச்சரின் காவல் பதக்கப் பிரிவில்,  திண்டுக்கல் சரக காவல் துணைத் தலைவர் டாக்டர் வி.சசி மோகன், சென்னை லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கக மேற்ச் சரக காவல் கண்காணிப்பாளர் தெ.சண்முக பிரியா, சென்னை தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை துணை கண்காணிப்பாளர் சி.எம்.ஆர்.மணிமொழியன், மாநில காவல் தலைமை கட்டுப்பாட்டு அறை தொழில்நுட்ப ஆய்வாளர் க.மதன் மோகன் மற்றும் கரூர் நகர காவல் நிலையத் தலைமை காவலர் மு.ரவிக்குமார் ஆகிய 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

விருதுக்குத் தேர்வாகியுள்ள இந்த 15 அதிகாரிகளுக்கும் தலா 8 கிராம் எடையிலான தங்கப் பதக்கமும், ரூ.25,000 ரொக்க வெகுமதியும்  வழங்கப்படும் என்றும், இதற்கான விருதுகளை முதலமைச்சர் பிறிதொரு சிறப்பு விழாவில் நேரில் வழங்கி கௌரவிப்பார் என்றும் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி ராஷ்டிரபதி பவன் ‘அம்ரித் உத்யான்’ஐ பார்வையிட பொதுமக்களுக்கு இலவச அனுமதி
அடுத்த செய்தி 24 மணி நேரத்தில் ₹2.5 கோடி வசூல் சாதனை: சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம்!

மார்ச் 5, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

டில்லி குண்டுவெடிப்பின் பாதிப்புகளை காட்டும் புகைப்படங்கள்

நவம்பர் 10, 2025
இந்தியா

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க தமிழ்நாடு முதல்வர் கோரிக்கை

ஆகஸ்ட் 13, 2026
இந்தியாவிசேட செய்திகள்

விழிஞ்சம் துறைமுகம், பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் என்று இந்தியப் பிரதமர் நம்பிக்கை தெரிவிப்பு!

மே 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?