முகத்தில் Powder அதிகமாகவும் அடிக்கடியும் பயன்படுத்துவது சிலருக்கு சருமம் உலர்வது, துளைகள் அடைதல் மற்றும் முகத்தில் சிறு பருக்கள் தோன்றுவது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
Powder முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சுவதால், உடனடியாக முகம் பிரகாசமாகவும், அழகாகவும் தோன்றும். ஆனால், அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும்போது சருமத்தின் இயற்கையான ஈரப்பதம் குறைந்து, முகம் வறண்டு அல்லது இறுக்கமாக உணரப்படும்.
குறிப்பாக, எண்ணெய் சருமம் கொண்டவர்கள் முகத்தில் Oil தெரியும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் Powder போடுவது, ஏற்கனவே இருக்கும் எண்ணெய் மற்றும் அழுக்கு ஆகியவற்றுடன் சேர்ந்து சருமத்தில் அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.இதனால் சிலருக்கு Whiteheads, Blackheads அல்லது சிறிய பருக்கள் தோன்றும்.
அதனால், முகம் முழுவதும் அதிகமாக Powder அடுக்குவதற்குப் பதிலாக, தேவையான இடங்களில் மட்டும் மெல்லிய அளவில் பயன்படுத்துவது சருமத்திற்கு ஏற்ற முறையாக இருக்கும்.

