ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கடந்த 3 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவிற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்.
இதன்படி குறித்த விடயம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கடுவெல நீதவான் நீதிமன்றில் இவரை ஆஜர்படுத்திய நிலையில், நீதவான் வெளிநாட்டு பயணத்தடை விதித்து பிணையில் விடுவித்தார்.

