நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்ட சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க அங்குள்ள சுற்றுலா மையங்களை பார்வையிட்டார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ். பவானந்தராஜா, ஜெ. றஜீவன் ஆகியோரும், வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத் தலைவர் ஜெ.விவேகானந்தன் ஆகியோரும் உடன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

