கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே, ஈரான் ஆதரவு பெற்றதாகக் கருதப்படும் ஆயுதக் குழுவான Kata’ib Hezbollah வை கனடாவின் அதிகாரப்பூர்வ பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் சேர்க்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய கிழக்கில் இடம்பெற்ற பல வன்முறைச் சம்பவங்களுடன் குறித்த அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகவும், அது ஈரானின் ஆதரவுடன் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, கனடாவின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், Kata’ib Hezbollah அமைப்பை பயங்கரவாத அமைப்பாக சட்டரீதியாக அறிவிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அமைப்புகள் வழங்கும் தகவல்கள், ஆதாரங்கள் மற்றும் சட்டரீதியான மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே எந்த அமைப்பையும் பயங்கரவாத பட்டியலில் சேர்ப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இந்தக் கோரிக்கை, கனடாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பான அரசியல் விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

