இலங்கை பொலிஸ் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தொடர்ச்சியாக பதவி வகித்த மூன்று பொலிஸ்மா அதிபர்கள் (IGP) பல்வேறு சர்ச்சைக்குரிய மற்றும் அதிர்ச்சியூட்டும் நிலைகளை எதிர்கொண்டுள்ளனர்.
இலங்கையின் 34ஆவது பொலிஸ்மா அதிபராக பதவி வகித்த பூஜித் ஜயசுந்தர, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கில், கொழும்பு நிரந்தர நீதாய மேல்நீதிமன்றத்தின் பெரும்பான்மை தீர்ப்பின் அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
அவரைத் தொடர்ந்து 35ஆவது பொலிஸ்மா அதிபராக இருந்த சி.டி. விக்கிரமரத்ன, சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணம் தற்கொலை என சந்தேகிக்கப்பட்டது.
மேலும், 36ஆவது பொலிஸ்மா அதிபராக இருந்த தேசபந்து தென்னக்கோன், கைது செய்யப்பட்டதுடன், பதவி நீக்க நடவடிக்கைகளையும் எதிர்கொண்டுள்ளார். தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் முக்கிய நிறுவனமான பொலிஸ் துறையின் உயரிய பதவியை வகித்த மூன்று அதிகாரிகளும் தொடர்ச்சியாக இவ்வாறான கடுமையான சூழ்நிலைகளை எதிர்கொண்டமை, நாட்டின் பொலிஸ் தலைமையின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு அத்தியாயமாக பார்க்கப்படுகிறது.


