யாழ் ராணி புகையிரதம் சேவையை ஆரம்பித்து இன்று நான்கு வருடம் நிறைவடைகின்ற நிலையில் யாழ் ராணி புகையிரதத்தில் நாளாந்தம் பயணம் செய்யும் உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் நான்காவது ஆண்டு நிறைவை கேக்வெட்டி கொண்டாடினர்.
குறித்த நிகழ்வானது கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் இன்று (22) பி.ப 4.00 மணிக்கு இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன், புகையிரத திணைக்களத்தின் வடமார்க்கத்திற்கான மேற்பார்வையாளர் வி.எம்.என். நிரந்த விசுந்தர ஆகியோர்விருந்தினராக கலந்து கொண்டனர்.
யாழ் மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு கடமைகளுக்காக செல்லும் பல அரச உத்தியோகத்தர்களுக்கு பொருளாதார நிலைமையில் பிரயாண செலவை குறித்த புகையிரதம் சேவையில் ஈடுபடுவதன் மூலம் குறைக்கின்றது.



