எல்நினோ தாக்கத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழு ஆகியோர் இணைந்திருந்ததுடன், எல் – நினோ தாக்கம் ஏட்படுவதட்கான சாத்தியக்கூறு 81% உள்ளது என தெரிவித்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட கூடிய விவசாயம் ,உணவு பாதுகாப்பு, பெருந்தோட்ட துறை, வலுசக்தி மற்றும் நீர் முகாமைத்துவம் ஆகிய தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.



