Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

ஒன்டாரியோ காட்டுத்தீப் புகையால் அமெரிக்கக் காற்றுக்கு மாசுபாடு: பிரதமர் கார்னியை எச்சரித்த டொனால்ட் ட்ரம்ப்

ஜூலை 20, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

ஒன்டாரியோ மாகாணக் காடுகளில் வீரியமாகப் பரவி வரும் காட்டுத்தீயினால் வெளிப்படும் அடர் புகை, எல்லை கடந்து அமெரிக்க மாநிலங்களின் வளிமண்டலத்தை கடுமையாகப் பாதித்து வருவது குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் மார்க் கார்னியை நேரில்
சந்தித்து தனது பலத்த கண்டனத்தையும் எச்சரிக்கையையும் பதிவு செய்துள்ளார்.

நியூ ஜெர்சியில் நடைபெற்ற ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியின் போது, இரு நாட்டுத் தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்து உரையாடிய போதே இக்கடுமையான எச்சரிக்கையை டிரம்ப் விடுத்துள்ளார்.

போட்டி முடிந்து திரும்பிய பின்னர் ஆண்ட்ரூஸ் கூட்டு விமானப் படைத்தளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் காற்றை நச்சு ஆக்குவதை நிறுத்திவிட்டு, கனடாவில் எரியும் காட்டுத்தீயைக் உடனடியாகக் கட்டுப்படுத்த நடவடிக்கை
எடுக்குமாறு பிரதமர் மார்க் கார்னியிடம் தாம் நேரடியாகவே தெரிவித்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

மார்க் கார்னியுடன் தனக்கு நல்லுறவு உள்ளது எனக் கூறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஆனால் அங்கிருந்து அமெரிக்காவுக்குள் வரும் புகையை உடனடியாகத் தடுத்தாக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த சுற்றுச்சூழல் பாதிப்பிற்காக கனடா தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் இல்லையெனில் கனடாவின் இறக்குமதிப் பொருட்கள் மீது மேலதிகச் சுங்கவரிகளை (Tariffs) விதிக்க நேரிடும்” எனவும், அமெரிக்க அதிபர் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.

ஒன்டாரியோ காடுகளில் மூண்டுள்ள நூற்றுக்கணக்கான காட்டுத்தீப் பரவல்கள் காரணமாக வெளிவரும் அடர்ந்த புகைப்படலம், தற்போது அமெரிக்காவின் மத்திய மேற்கு (Midwest), வடகிழக்கு (Northeast) மற்றும் மிட்-அட்லாண்டிக் பிராந்தியங்களை முற்றாகச் சூழ்ந்துள்ளது.

இதனால் வளிமண்டலக் காற்றின் தரம் ஆபத்தான நிலையை எட்டியுள்ளதால், அமெரிக்க மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தொடர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையிலேயே, கனடாவுக்கான அமெரிக்க அதிபரின் புதிய எச்சரிக்கை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கனடாவிலிருந்து வீசும் நச்சுப் புகையைக் காரணம் காட்டி, கனேடியப் பொருட்கள் மீது மேலதிக சுங்கவரிகளை விதிக்கப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தியுள்ளமை இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக மற்றும் தூதரக உறவுகளில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிரம்பின் இப் பகிரங்க விமர்சனங்கள் குறித்து, பிரதமர் மார்க் கார்னியின் அலுவலகம் உடனடியாக உத்தியோகபூர்வ பதிலெதனையும் வெளியிடவில்லை.

எனினும், சமூகவலைத்தளப் பதிவொன்றில் கருத்து தெரிவித்திருந்த பிரதமர் மார்க் கர்னி, காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த கனடா தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் 5,300க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். தீ பரவும் இடங்களை உடனுக்குடன் கண்டறிந்து கட்டுப்படுத்த
செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் வெப்ப வரைபடத் தொழில்நுட்பங்கள் (Thermal imaging) பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மத்திய அரசாங்கத் தரவுகளின்படி, நடப்பு பருவத்தில் இதுவரை சுமார் 2.4 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவிலான காடுகள் தீக்கிரையாகியுள்ளமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி ருவாண்டா இனப்படுகொலையில் தொடர்புடைய குற்றவாளி, ஒட்டாவாவில் கைது
அடுத்த செய்தி “விஞ்ஞானி டெனிஸ் லூ மீதான விசாரணையைத் தன்னிச்சையாகத் தொடங்கவில்லை” நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது கனேடிய உளவு அமைப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

ஜனவரி 26, 2026
கனடா

டேவ் ‘பிக்’ டர்மலை கனடாவிடம் ஒப்படைக்க இத்தாலிய நீதிமன்றம் அனுமதி

மார்ச் 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

நவக்கிரி மத்திய மருந்தகத்தில் இடம்பெற்ற சித்த மருத்துவ கண்காட்சி

மே 19, 2026
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

இனி WhatsApp இல் புகைப்படங்களை சேமிக்க முடியாதா?

ஏப்ரல் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?