பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைதான சுரேஷ் சலே தரப்பிலிருந்து அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
