மொன்றியல் நகரில் உள்ள புகழ்பெற்ற ஜாக்-கார்ட்டியர் (Jacques-Cartier) மேம்பாலத்தின் அடிப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கூடாரம் ஒன்றிற்குள் இருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கருதும் மொன்றியல் மாநகரப் பொலிஸார், இது குறித்த விரிவான விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
மொன்றியலின் வில்லே-மேரி (Ville-Marie) பெருநகரப் பகுதியில் அமைந்துள்ள ஜாக்-கார்ட்டியர் மேம்பாலத்தின் அடிவாரத்தில், தற்காலிகக் கூடாரம் ஒன்றிற்குள் நபர் ஒருவர் அசைவற்ற நிலையில் கிடப்பதாக அவசரக்கால உதவி மையத்திற்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முதலுதவிப் படையினர், அந்த நபரை ஆய்வு செய்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர்.
உயிரிழந்தவருக்கு 36 வயது என்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவரின் பாலின விபரங்களை வெளியிடப் பொலிஸார் மறுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கது


