நாட்டில் கடந்த ஆறு மாத காலப் பகுதியில் 23 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், இதில் நான்கு சிறுவர்களும் உள்ளடங்குவதாக சமூக வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார்.
இதுவரைக்கும் 40,443 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இதில் 50 சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறிப்பாக கொழும்பு, கம்பஹா, காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய மாவாட்டங்களில் டெங்கு நோய் பரவும் மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனை கட்டுப்படுத்த கொழும்பு மாவட்ட பகுதியில் எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதியிலிருந்து ஜூன் 21 ஆம் திகதி வரைக்கும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக டெங்கு ஒழிப்பு குழு தீர்மானித்துள்ளது.


