Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

தங்காலை காணியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் குறித்து வெளியான தகவல்!

செப்டம்பர் 21, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தங்காலை,நெடோல்பிட்டியவில் காணியொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் குறித்த சோதனை அறிக்கையை அடுத்த வாரம் பொலிஸாரிடம் கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.

குறித்த பொருட்கள் தொடர்பான சோதனைப் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாக சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட குற்றக்குழுவினரால் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மித்தெனிய பகுதியில் காணியொன்றிலிருந்து ஐஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனையடுத்து, தங்காலை நெடோல்பிட்டிய பகுதியிலும், கந்தானை பகுதியிலும் இதேபோன்ற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்தப் பொருட்களின் மாதிரிகள் சோதனைக்காக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்திடமும் ஒப்படைக்கப்பட்டன.

அதன்படி, மித்தெனிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களில் மெத்தம்பேட்டமைன் என்ற ஐஸ் இருப்பதைத் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களமும் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளன.

சம்பந்தப்பட்ட இடத்திலிருந்து எடுக்கப்பட்ட 20 மாதிரிகளில் 17 மாதிரிகளில் மெத்தம்பேட்டமைன் இரசாயனங்கள் இருப்பதாகத் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை வழங்கிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தங்காலை நெடோல்பிட்டிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களின் சோதனை அறிக்கையை அடுத்த வாரத்திற்குள் காவல்துறையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தச் சபை தெரிவித்துள்ளது.

கந்தானை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களின் சோதனை அறிக்கையை விரைவில் வெளியிட எதிர்பார்ப்பதாகவும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி கடமையிலிருந்த மருத்துவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற காவல்துறை அதிகாரிகள் பணியிடைநீக்கம்!
அடுத்த செய்தி மருந்து தட்டுப்பாடு தொடர்பில் சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் உணவக முகாமையாளர் மற்றும் ஊழியருக்கு ஐந்து வருட ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டணை!

ஜூன் 6, 2025
இலங்கை

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கம் நிதியை ஒதுக்கியுள்ளது – ஆளுநர் நா.வேதநாயகன்

ஜனவரி 27, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவராக க.பிரகாஸ் நியமனம்

பிப்ரவரி 9, 2026
இலங்கை

மருதங்கேணி நிதி நிறுவனத்தில் மோசடி – ஒருவர் கைது.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?