Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக் மாகாண பொலிஸ் ஒழுக்கநெறி ஆணையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல்

ஜூன் 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் (Montreal) நகரில் கறுப்பின வாலிபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், துப்பாக்கிச் சூடு நடத்திய மொன்றியல் பொலிஸ் அதிகாரி, கியூபெக் மாகாண பொலிஸ் ஒழுக்கநெறி ஆணையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட கறுப்பின வாலிபர் நிக்கோலஸ் கிப்ஸ் (Nicholas Gibbs) சுட்டுக் கொல்லப்பட்டடிருந்தார்.

அச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் ரீதியாகத் தான் நிரபராதி என நிரூபிக்கப்பட்ட பின்னரும், அதே விவகாரத்தை மீண்டும் கிளறி ஒழுக்கநெறி தீர்ப்பாயம் மூலம் தன் மீது விசாரணை நடத்துவது சட்டவிரோதமானது என, அந்த பொலிஸ் அதிகாரி டொமினிக் பிரூவ் (Dominique Proulx), தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கியூபெக் உயர் நீதிமன்றத்தில் (Quebec Superior Court) தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், தன் மீது ஒழுக்கநெறி தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள அனைத்து விசாரணைகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் (Quash the citations) என பொலிஸ் அதிகாரி டொமினிக் பிரூவ் கோரியுள்ளார்.

ஒரு குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக மாகாணத்தின் குற்றவியல் விசாரணைப் பிரிவு மற்றும் சுயாதீன புலனாய்வுப் பிரிவு ஆகியவை முறையான விசாரணை நடத்தி குற்றச்சாட்டு எதுவுமில்லை என முடிவெடுத்த பின்னர், ஒழுக்கநெறி ஆணையம் அதே காரணங்களை முன்வைத்துத் தண்டிப்பது இயற்கை நீதிக்கு எதிரானது என்ற வாதத்தை அவர், தன் கோரிக்கையூடாக முன்வைத்துள்ளார்.

உயிரிழந்த கறுப்பின வாலிபரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், 2021 ஆம் ஆண்டு ஒழுக்கநெறி ஆணையாளர் இதுகுறித்த  விசாரணையை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி அத்தியாவசிய உதவிகளுக்கு பொலிஸாரை  நாடாத மக்கள்
அடுத்த செய்தி 19 அவசரச் சட்டமூலங்களை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டும் கிறிஸ்டின் பிரெஷெட்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மத்திய அரசு தங்களை உளவு பார்க்கின்றது – பால் செயின்ட் பியர் பரபரப்பு குற்றச்சாட்டு

மே 13, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மாஃபியா குழுவோடு தொடர்புடையதாகக் கருதப்படும் நபர் ஒருவரின் இல்லத்தின் மீது நடத்த திட்டமிட்ட தீவைப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

மே 21, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் வீடுகளைப் புதுப்பிப்பதற்கான (Renovation) செலவுகள் அதிகரிப்பு

ஜனவரி 10, 2026
கியூபெக்

மொன்றியல் பிராந்தியத்திற்கு அவசர நிதியுதவி வழங்கிய கியூபெக் அரசு

ஜூன் 2, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?