Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக் மாகாண பொலிஸ் ஒழுக்கநெறி ஆணையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல்

ஜூன் 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் (Montreal) நகரில் கறுப்பின வாலிபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், துப்பாக்கிச் சூடு நடத்திய மொன்றியல் பொலிஸ் அதிகாரி, கியூபெக் மாகாண பொலிஸ் ஒழுக்கநெறி ஆணையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட கறுப்பின வாலிபர் நிக்கோலஸ் கிப்ஸ் (Nicholas Gibbs) சுட்டுக் கொல்லப்பட்டடிருந்தார்.

அச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் ரீதியாகத் தான் நிரபராதி என நிரூபிக்கப்பட்ட பின்னரும், அதே விவகாரத்தை மீண்டும் கிளறி ஒழுக்கநெறி தீர்ப்பாயம் மூலம் தன் மீது விசாரணை நடத்துவது சட்டவிரோதமானது என, அந்த பொலிஸ் அதிகாரி டொமினிக் பிரூவ் (Dominique Proulx), தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கியூபெக் உயர் நீதிமன்றத்தில் (Quebec Superior Court) தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், தன் மீது ஒழுக்கநெறி தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள அனைத்து விசாரணைகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் (Quash the citations) என பொலிஸ் அதிகாரி டொமினிக் பிரூவ் கோரியுள்ளார்.

ஒரு குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக மாகாணத்தின் குற்றவியல் விசாரணைப் பிரிவு மற்றும் சுயாதீன புலனாய்வுப் பிரிவு ஆகியவை முறையான விசாரணை நடத்தி குற்றச்சாட்டு எதுவுமில்லை என முடிவெடுத்த பின்னர், ஒழுக்கநெறி ஆணையம் அதே காரணங்களை முன்வைத்துத் தண்டிப்பது இயற்கை நீதிக்கு எதிரானது என்ற வாதத்தை அவர், தன் கோரிக்கையூடாக முன்வைத்துள்ளார்.

உயிரிழந்த கறுப்பின வாலிபரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், 2021 ஆம் ஆண்டு ஒழுக்கநெறி ஆணையாளர் இதுகுறித்த  விசாரணையை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி அத்தியாவசிய உதவிகளுக்கு பொலிஸாரை  நாடாத மக்கள்
அடுத்த செய்தி 19 அவசரச் சட்டமூலங்களை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டும் கிறிஸ்டின் பிரெஷெட்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

பழைய துறைமுகத்தில் நபர் ஆற்றுக்குள் விழுந்து விபத்து: தீவிர தேடுதலுக்குப் பின் கடலோரக் காவல்படையினால் மீட்பு!

ஜூலை 13, 2026
கியூபெக்

கியூபெக் மாகாணத்தில் 30 ஆதிகாமெ இனப்பெருக்கங்களுக்கு கருத்தடை சிகிச்சைகள் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு!

அக்டோபர் 13, 2025
கியூபெக்

பத்ரிசியா பெர்குசன் வழக்கிற்கு தீர்ப்பு வழங்கிய மொன்றியல் நீதிமன்றம்

மே 26, 2026
கியூபெக்

தேர்தல் தொகுதிகளை மாற்றும் திட்டத்திற்கு எதிரான மேன்முறையீட்டை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

ஏப்ரல் 23, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?