முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி எனப்படும் இறுதி யுத்தத்தின் போது மக்களின் அவலங்களை வெளிப்படுத்தும் கஞ்சி வழங்கும் செயற்பாடு வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர்கள் வாழும் பகுதிகளில் உணர்வுபூர்வமாக இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் மன்னார் மாவட்ட போராளிகள் நலன்புரி சங்கத்தின் அனுசரணையுடன், பொது மக்களின் ஏற்பாட்டில், மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் கிழக்கு பகுதியிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
குறித்த நிகழ்வு இன்றைய தினம் (15) காலை 11.45 மணி அளவில் பெரியபண்டிவிரிச்சான் மரிய கொறட்டி தேவாலய வளாகத்தில் இடம் பெற்றிருந்ததோடு, தேவாலயத்திற்கு முன்பு வீதியால் சென்றவர்களுக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மதகுருக்கள், இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
