தற்போது இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான விமான போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையர்கள் இஸ்ரேலில் உள்ள வேலைவாய்ப்புகளுக்கு செல்வதற்கு இது பெரியளவில் வழிவகுக்கும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இதன்படி இன்றையதினம் 47 பேர் அடங்கிய குழுவொன்று இஸ்ரேலுக்கு வேலைக்காக பயணமாகியுள்ளனர்.
குறித்த 47 பேரும் பராமரிப்பு துறை சார்ந்த வேலைவாய்ப்புக்காக அனுப்பப்பட்டதுடன், இதில் 42 பெண்களும், ஐந்து ஆண்களும் அனுப்பப்பட்டுள்ளதுடன் இது இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 202 வது குழுவாகும்.


