கடந்த ஒரு மாத காலமாக சுங்கத்திணைக்களம் தடுத்து வைத்துள்ள கவிஞர் தீபச்செல்வனின் புத்தகங்களை விடுவிக்க வலியுறுத்தி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தற்போது குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் இலக்கிய படைப்பாளிகள், பொது அமைப்பு சார்ந்தோர், அரசியல் கட்சி சார்ந்தோர், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
