வவுனியா நகரம் முழுவதும் அட்சய திருதியை முன்னிட்டு நகை கடைகளில் வியாபார நடவடிக்கைகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக தங்கம், வெள்ளி, ஆபரணங்கள் மற்றும் மங்களகரமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் மக்கள் திரள் அதிகரித்துள்ளது.
அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி உட்பட மங்களகரமான பொருட்கள் வாங்குவது வளமும் செழிப்பும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையால், அதிகாலை முதலே மக்கள் கடைகளுக்கு திரண்டனர்.
இதனால் நகரின் முக்கிய நகை கடைகளில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
இதேவேளை நகைக்கடைகள் பல சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளன.
குறிப்பாக, பொதுமக்களின் வருகையால் வவுனியா நகரில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது.
