Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இந்தியா

இலங்கை தமிழர்களின் நலன் குறித்து விஜய் பேச்சு

ஏப்ரல் 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமையை வழங்க தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தினால் இன்று (16) வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விஜய் தலைமையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், ஏனைய கட்சிகளுக்கு பாரிய சவாலாக அமையும் என்ற கருத்துக் கணிப்புகளுக்கு மத்தியில், அந்தக் கட்சி இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் இலங்கை தமிழர்களின் நலன் மற்றும் கச்சத்தீவு விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை பெற்றுக் கொடுப்பதன் ஊடாக, மாநில அரசின் அனைத்து நலத் திட்டங்களையும் இலங்கைத் தமிழர்கள் பெறுவதை உறுதி செய்ய முடியும் என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் வாழும் தமிழர்களின் உரிமைகளை, பண்பாட்டு அடையாளங்களை, உடமைகளை காப்பதற்கு ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான அழுத்தங்களை தமது கட்சி வழங்கும் என தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இன ரீதியாக நிலவும் பாகுபாடுகளை களைய, ஒன்றிய அரசு ஊடாக தமிழக வெற்றிக் கழகம் உரிய முயற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் எனவும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்திய – இலங்கை அரசுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்திற்கு அமைய, மன்னார் வளைகுடாவில் தமிழக கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்க அழுத்தம் கொடுக்கப்படும் என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, தமிழக கடற்றொழிலாளர்களின் உரிமையை தக்கவைப்பதற்கு, தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்வதற்காக, உண்மையாகவும், உணர்வுபூர்வமாகவும் தமிழக வெற்றிக் கழகம் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என அதன் தேர்தல் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

முந்தைய செய்தி பிள்ளையான் மருத்துவமனையில் அனுமதி
அடுத்த செய்தி ஆழ்கடலில் சிக்கிய சந்தேகப் படகு – 4 பேர் கடற்படையால் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு காட்டு பகுதியில் இரு கை துப்பாக்கிகள் மீட்ப்பு!

டிசம்பர் 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வெளிநாடு செல்வோருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முக்கிய அறிவிப்பு!

மே 31, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கடலட்டைகள் மீட்பு – ஒருவர் கைது

அக்டோபர் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணிக்கு நீதி கோரி நாளை ஐ.நா சபை வளாகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம்!

ஜூலை 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?